தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான 3 நாள் விளையாட்டு போட்டிகள்!

தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான 3 நாள் விளையாட்டு போட்டிகள்!

விளையாட்டு போட்டிகள் 

புதுக்கோட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான 3 நாள் விளையாட்டு போட்டிகள் தொடங்கின.
தமிழக தீயணைப்புத் துறையின் திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கான 3 நாள் விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டையில் தொடங்கின. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இந்தப் போட்டியை தீயணைப்புத் துறையின் மத்திய மண்டலத் துணை இயக்குநர் குமார் தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் மாவட்டத் தீயணைப்பு அலுவலர் இ. பானுபிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.மண்டல அளவிலான இந்த விளையாட்டுப் போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் ஆகிய 10 சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கலந்துகொண்டனர்.துறை சார்ந்த போட்டிகளோடு, நீச்சல், தடகளம், கூடைப்பந்து, இறகுப் பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். போட்டியின் நிறைவு நாளான புதன்கிழமை (ஜன. 31) வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கப்படும்.

Tags

Next Story