விருத்தாசலம் அருகே 3 நாட்கள் மின்தடை

விருத்தாசலம் அருகே 3 நாட்கள் மின்தடை

மின் தடை 

விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 230 கே.வி. டவர் லைன் அமைக்கும் பணிகள் அமைக்கும் பணிகள் நடப்பதால் புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம், முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 நாட்கள் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 230 கே.வி. டவர் லைன் அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக இன்று 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை). நாளை 10 ஆம் தேதி (சனிக்கிழமை), நாளை மறு நாள் 11 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளதால் புதுக்கூரைப்பேட்டை, குப்பநத்தம், சாத்தமங்கலம், முந்திரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்றும், நாளையும் காலை மணி முதல் மதியம் 2 மணி வரையும், நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story