திருச்சி வியாபாரியிடம் ரூ.1.42 லட்சம் திருடிய தொழிலாளர்கள் 3 பேர் கைது

திருச்சி வியாபாரியிடம் ரூ.1.42 லட்சம் திருடிய தொழிலாளர்கள் 3 பேர் கைது

கோப்பு படம்

திருச்சி வியாபாரியிடம் ரூ.1.42 லட்சம் திருடிய தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் திருச்சி வியாபாரி வேனில் வைத்திருந்த ரூ. 1.42 லட்சத்தை திருடிய சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் நவீன்குமார் (37). காகிதத்தாள் மொத்த வியாபாரம் செய்து வரும் இவர்,வேனில் காகிதத்தாள் கட்டுகளை எடுத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வியாழக்கிழமை வந்தார்.

கீழவாசல் எஸ்.என். எம். ரஹ்மான் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் இருந்த ரூ. 1.42 லட்சம் ரொக்கம் திருட்டு போனதாக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் நவீன் குமார் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், நவீன்குமாருடன் வந்த சுமை தூக்கும்தொழிலாளியான திருச்சி சங்கரன் பிள்ளை சாலையைச் சேர்ந்த ஆர்.சூர்யா (19), அவரது நண்பர்களான அதேபகுதியைச் சேர்ந்த எம். சுப்பிரமணி (20), ஆர்.பிரவீன்குமார் (19) ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

Tags

Next Story