திண்டிவனத்தில் தொழிலாளியிடம் பைக் பறித்த 3 பேர் கைது

திண்டிவனத்தில் தொழிலாளியிடம் பைக்  பறித்த 3 பேர் கைது

பைக் பறித்தவர்கள்

திண்டிவனத்தில் தொழிலாளியிடம் பைக் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராமானுஜம் (வயது 25). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பஸ் நிறுத்தம் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு,

அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ராமானுஜத்தை தாக்கி, அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராமானுஜம் ரோசணை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில்,

ராமானுஜத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது ரோசணை மருத்துவமனை ரோடு பகுதியை சேர்ந்த கிடங்கலான் என்ற சரண்ராஜ்(31), அவரப்பாக்கம் தாடிக்கா ரன்குட்டை தெருவை சேர்ந்த விஜய் (21), சுரேஷ் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சரண்ராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

Tags

Next Story