திண்டுக்கல் அருகே கத்தி முனையில் செல்போன் பறித்த 3 பேர் கைது

திண்டுக்கல் அருகே கத்தி முனையில் செல்போன் பறித்த 3  பேர் கைது

கோப்பு படம் 

திண்டுக்கல் அருகே ஆரம்ப சுகாதார நிலைய டிரைவர் மற்றும் பிசியோதெரபிஸிட் ஆகியோரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் டிரைவர் அழகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் செல்வராணி ஆகியோர் இருவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்தனர்.

இது குறித்து S.P.பிரதீப் உத்தரவின் பேரில் DSP.உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் S.P.தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு பொன்னுமாந்துரை புதுப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த ஸ்ரீரங்கன்(28), பூபதி(23), உதயகுமார்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 2 செல்போன் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story