உறவினரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது !

உறவினரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது !

கைது

உறவினரை கொலை செய்த வழக்கில் மகன் மற்றும் கள்ளக்காதலுடன் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வண்ணாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் தங்கமணி இவரது மனைவி மாசிலாமணி நூல் மில் ஒன்றில் வேலை செய்த போது அங்கு பணிபுரிந்த தமிழன் என்பவருடன் மாசிலாமணிக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டு 10 பவுன் நகை வரை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மாசிலாமணியின் மகளுக்கு பூப்புநன்னீராட்டு விழா நடத்தலிருந்த இருந்த நிலையில் தமிழன் மாசிலாமணியின் நகைகளை கொடுக்கவில்லை. இதனால் நெருங்கி உறவினர் இறந்தால் பூப்புநன்னீராட்டு நடக்காது என கருதிய மாசிலாமணி , அவரது மகன் நகைமுகன் , கள்ளகாதலன் தமிழன் ஆகியோர் சேர்ந்து 19 ம்தேதி உறவினரான பழனிச்சாமி என்பவரை தோட்டத்து வீட்டில் வைத்து கொலை செய்து எரித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெருந்துறை காவல்துறையினர் கொலை செய்த மாசிலாமணி கள்ளக்காதலன் தமிழன் மகன் 17 வயதுடைய கல்லூரி மாணவர் நகை முகன் ஆகிய மூவரையும் கைது செய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story