டி.கூடலூரில் சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது

டி.கூடலூரில் சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது

சேவல் சண்டை

டி.கூடலூரில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் 13 டூ வீலர்களை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்னகாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் மகாமுனிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சி. கூடலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அருகில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்த சேவல் சண்டையில் சி. கூடலூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப், கூடலூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவன்மலை, அரவக்குறிச்சி, கரடிப்பட்டி பகுதி சேர்ந்த மோகன், தாராபுரம் பிச்சைகல் பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி ஈடுபட்டது தெரியவந்தது. காவலரை கண்டதும் பிரதீப் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார் .மற்றும் மூவரும் பிடிபட்டனர். மேலும் சேவல் சண்டை பார்ப்பதற்காக வந்திருந்த நபர்கள் கொண்டு வந்த 13 டூ வீலர்களையும், ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்னதாராபுரம் காவல்துறையினர்.

Tags

Next Story