பரமத்தி அருகே பணம் வைத்து சூதாடிய 3பேர் கைது

பரமத்தி அருகே பணம் வைத்து சூதாடிய 3பேர் கைது

காவல் நிலையம்

பரமத்தி அருகே பணம் வைத்து சூதாடிய 3பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட பெரிய தாதம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 28ஆம் தேதி காலை 11: 30- மணி அளவில் பெரியதாதம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அருகில் உள்ள ராஜா வாய்க்கால் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, ஆண்டாங் கோவில் கிழக்கு, கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாரதி வயது 35, ஆத்தூர் பிரிவு அமிர்தாம்பாள் நகர், ஃபர்ஸ்ட் கிராஸை சேர்ந்த சசிகுமார் வயது 32, ஜெகதாபி அருகே உள்ள பொம்மு கிணத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 28 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, பணம் வைத்து சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும்,

ரூபாய் 300-யும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags

Next Story