குகை வழி பாதையில் பணம் வைத்து சூதாடிய 3பேர் கைது

குகை வழி பாதையில் பணம் வைத்து சூதாடிய 3பேர் கைது

காவல் நிலையம் 

குகை வழி பாதையில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குகைவழி பாதையில் பணம் வைத்து சூதாடுவதாக, காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜனவரி 13ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், பசுபதிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே குகைவழி பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது குகை வழி பாதையில் பணம் வைத்து சூதாடிய, பாலம்மாள்புரம் கே எம் சி காலனியை சேர்ந்த கார்த்திகேயன், பசுபதிபாளையம், அருணாச்சலம் நகரை சேர்ந்த செந்தில்குமார், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்தி 52- சூதாட்ட அட்டைகளும் ரூபாய் 300யும் பறிமுதல் செய்தனர்.

மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப். பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story