அனுமதியின்றி சரக்கு விற்ற 3 பேர் கைது!

அனுமதியின்றி சரக்கு விற்ற 3 பேர் கைது!

பைல் படம்

விராலிமலையில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் கீரார் சாலையில் உள்ள கல்குத்தான்பட்டி பகுதியில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாஸ்மாக் மதுபான கடை அருகே திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த ஆவுடையார்கோவிலை சேர்ந்த தச்சணாமூர்த்தி என் பவரை கைது செய்தனர். இதேபோல் திருமயம் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வாரியப்பட்டி சாலையில் சோதனை நடத்தி ராரா புரத்தை சேர்ந்த சுரேஷ்(30) என்பவரையும், கோனா பட்டு சாலையில் தவசு(53) என்பவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story