ஜேடர்பாளையத்தில் மதுபானங்கள் விற்பனை செய்த 3 பேர்கள் கைது

ஜேடர்பாளையத்தில் மதுபானங்கள் விற்பனை செய்த 3 பேர்கள் கைது

பைல் படம்

ஜேடர்பாளையத்தில் மதுபானங்கள் விற்பனை செய்த 3 பேர்கள் கைது செய்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரமத்தி வேலூர் தாலுகா, சானார்பாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மூன்று பேர் கைது‌. ஜேடர்பாளையம் போலீசார் சானார்பாளையம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்ட போது அங்கு ஒருவர் மறைத்து வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து சானார்பாளையம் பகுதியை சேர்ந்த காமராஜ்(45) என்பவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் ஜேடர்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன்( 31) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் உள்ள பரிசல் துறை அருகே மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த சுந்தர்ராஜன்( 33) என்பவரை கைது செய்து அவரிடம் வைத்திருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதனையடுத்து அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 3 பேர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story