டிராக்டரில் மண் கடத்திய 3 பேர் கைது

டிராக்டரில் மண் கடத்திய 3 பேர் கைது

கோப்பு படம்


கடையம் அருகே மண் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்

தென்காசி மாவட்டம் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கரம்பை மண் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் உரிய அனுமதி சீட்டு இல்லாமலும் விவசாயத்திற்காக அல்லாமல் விற்பனைக்கு செங்கல் சூளைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. உடனே இதையடுத்து 3 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இதை குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story