ராமநாதபுரம்: பைக் திருடன் கைது

ராமநாதபுரம்:  பைக் திருடன் கைது

பைக் திருட்டு

ஏர்வாடியில் இருசக்கர வாகனம் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனம் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக, கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தொண்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் 21, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் 25, எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு முகமது முஸ்தபா 19, ஆகியோர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மூன்று வாலிபர்களையும் ஏர்வாடியில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து 7 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story