சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

வேலாயுதம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, அய்யம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மே 19ஆம் தேதி இரவு 7:30- மணி அளவில், அய்யம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது அப்பகுதியில், பாலச்சந்திரன் என்பவர் பெட்டிக்கடையின் பின்புறம் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் ,வென்னியூர் பகுதியைச் சேர்ந்த பழனி, மதுரை மாவட்டம், சின்ன கட்டளை பகுதியைச் சேர்ந்த கட்டையன், ராமநாதபுரம் மாவட்டம் ,தேனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-ஐயும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story