பெரம்பலூர் அருகே திருட்டு வழக்கில் 3 பேரை கைது

பெரம்பலூர் அருகே திருட்டு வழக்கில் 3 பேரை கைது

கைதான வாலிபர்கள்

பெரம்பலூர் அருகே திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடந்த மூன்று திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகளை மாவட்ட காவல் கண்காணப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்ததிலும் திருட்டில் ஈடுபட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் விநாயகர் தெரு, சுந்தர்ராஜ் மகன் யாழின் மற்றும் அதே ஊர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் இளவரசன், பெரம்பலூர் மாவட்டம் அடைக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த அன்சாரி மகன் முகமது கிரி ஆகிய மூன்று நபர்கள் என்பதும் மேலும் துறையூர், திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்த நிலையில் இந்த மூன்று நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 2 பவுன் செயின், 1/4 பவுன் மோதிரம், 10,000 ரூபாய் பணம் மற்றும் வெள்ளி அரைஞான் கயிறு ஆகியவற்றை பறிமுதல் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி குற்றவாளிகள் மூன்று நபர்களை பாடாலூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தார்.

Tags

Next Story