ஆற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் மாயம்

ஆற்றில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் மாயம்

தேடும் பணி

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்று மாயமான 3 மாணவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 8 மாணவர்கள் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த 1 மாணவர் என மொத்தம் 09 பேர் தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிக்கு சென்றுவிட்டு மீண்டும் திருமானூர் வழியே இன்று சென்று கொண்டிருந்தனர். அப்போது அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்று நீரில் சிக்கிய 6 பேரை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்கபட்டனர். மேலும் சென்னையை சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ஒரு மாணவரை அரியலூர் தீயணைப்பு துறையினர், ஆற்றில் இறங்கி தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.

Tags

Next Story