அனுமதியின்றி மண் எடுத்த 3 லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி மண் எடுத்த 3 லாரிகள் பறிமுதல்

மணல் திருட்டு 

அரக்கோணம் அருகே அனுமதியின்றி மண் எடுத்த மூன்று லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அரக்கோணத்தை அடுத்த இலுப்பை தண்டலம் பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை பணிக்காக தனிநபருக்கு சொந்தமான இடத்தில் இருந்து அரசு அனுமதி இன்றி மண் எடுப்பதாக புகார்கள் வந்தது. அதன்பேரில் அரக்கோணம் தாசில்தார் ஸ்ரீதேவி தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வருவதை பார்த்ததும் மண் எடுத்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து மண் கடத்தலுக்காக பயன்படுத்திய 3 டிப்பர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தையும் தாசில்தார் ஸ்ரீதேவி மற்றும் போலீசார் பறிமுதல் செய்து தக்கோலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story