3கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

3கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

மாவட்ட ஆட்சியர் 

தூத்துக்குடி கோட்டத்தில் 3 கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி கோட்டத்தில் 3 கிராம நிர்வாக அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி -1 கிராமம், கிராம நிர்வாக அலுவலர் மாரிசங்கர் கோரிக்கையின் பேரில் மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி வட்டம், குலையன்கரிசல் கிராமம், (காலியாக உள்ள பணியிடத்தில்) பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர் கிராமம், கிராம நிர்வாக அலுவலர் சிவகுருநாதன் கோரிக்கையின் பேரில் மாறுதல் செய்யப்பட்டு தூத்துக்குடி வட்டம், குமாரகிரி கிராமம், செல்வகனி என்பவருக்குப் பதிலாக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி வட்டம், குமாரகிரி கிராமம் கிராம நிர்வாக அலுவலர் செல்வக்கனி மாறுதல் செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் வட்டம், செக்காரக்குடி -2 கிராம நிரவாக அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி குலையன்கரிசல், செக்காரக்குடி பகுதி-1 மற்றும் செக்காரக்குடி பகுதி-2 ஆகிய கிராமங்கள் 2024ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது மாறுதல் குறித்த கலந்தாய்விற்கு உட்படுத்தப்படும் என்ற நிபந்தனைக்குட்பட்டு இம்மாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story