சேலத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது !

சேலத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது !

கைது

சேலத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டார்.
சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு(60). இவர் கடந்த மாதம் நெத்திமேட்டில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு டவுன் பஸ்சில் சென்றார். குகை பகுதியில் பேருந்து வந்த போது அலமேலு அணிந்திருந்த 5பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. இதுபற்றி அவர் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லட்சுமி (30), சின்னத்தாயி (30), காளியம்மாள் (40) ஆகிய 3பேரும் நகை பறிப்பில் ஈடுபட்டிருப்பதும், இவர்கள் 3பேரும் கோவையில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள். 3 பேரையும் செவ்வாய்பேட்டை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 5பவுன் நகையும் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் 3பேரையும் நகை பறிப்பு வழக்கில் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story