பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

கைது

சேலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 31). இவர் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்தபோது 3 வாலிபர்கள் வந்தனர். பின்னர் பெட்ரோல் பங்க் பெண் ஊழியரிடம் வெகுநேரம் பேசி விட்டு சென்றனர்.

இதுகுறித்து மணிகண்டன் பெண் ஊழியரிடம் கேட்டு உள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் அந்த 3 வாலிபர்கள் பெட்ரோல் பங்கிற்கு வந்து மணிகண்டனை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் செட்டிச்சாவடியை சேர்ந்த மது மகன் உதயகுமரன் (26), ஏழுமலை மகன் கிருஷ்ணன் (30), விஜயமணி மகன் அரவிந்த் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story