தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரை மிரட்டி பணம் பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி மகன் முருகன் (47). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு எப்.சி.ஐ ரவுண்டானா அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடமிருந்த ரூ.2,000 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜோசப் (எ) ஜெயராஜ் (28), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர்களான பிரபாகர் மகன் சரவணக்குமார் (24) மற்றும் முருகன் மகன் மாரிசங்கர் (23) ஆகியோர் மேற்படி முருகனிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தார்.

மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜோசப் (எ) ஜெயராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 5 வழக்குகளும், மாரிசங்கர் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story