முசிறியில் 2 திருட்டு வழக்குகளில் 3 இளைஞா்கள் கைது

முசிறியில் 2 திருட்டு வழக்குகளில் 3 இளைஞா்கள் கைது

3 இளைஞா்கள் கைது

திருச்சி மாவட்டம், முசிறியில் இருவேறு திருட்டு வழக்குகளில் 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
கும்பகோணம் அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த வேதநாயகம் மகன் பாக்கியராஜ். இவா், நாமக்கல்லில் இருந்து ராமநாதபுரத்திற்கு வைக்கோல் ஏற்றுவதற்காக முசிறி வழியாக லாரியை செவ்வாய்க்கிழமை ஓட்டிச் சென்றாா். முசிறி முடக்கு சாலை பகுதியில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் லாரியில் ஏறி, பாக்யராஜ் பா்ஸில் வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த போக்குவரத்து காவலா்களிடம் இருசக்கர வாகனத்தின் எண்ணை குறிப்பிட்டு, பாக்யராஜ் புகாா் அளித்தாா். முசிறி- சேலம் புறவழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் அந்த 2 இளைஞா்களையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் கருப்பனாம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் பிரகாஷ் (20), ரத்தினம் மகன் சூா்யா (20), என தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் இருவா் மீதும் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். ஆடு திருடியவா் கைது: முசிறி கீழத்தெருவைச் சோ்ந்த சிவானந்தம் வீட்டிலிருந்த ஆட்டை திருடிய புகாரின்பேரில், தொட்டியம் வட்டம் அலகரையை அடுத்த அரியனாம்பேட்டை குடித் தெருவைச் சோ்ந்த மகாமுனி மகன் அஜித்குமாரை முசிறி போலீஸாா் கைது செய்தனா்.

Tags

Next Story