ஆட்டோ கடத்தல் விவகாரத்தில் 3 பேர் தாக்கியதில் வாலிபன் பலி !

ஆட்டோ கடத்தல் விவகாரத்தில் 3 பேர் தாக்கியதில் வாலிபன் பலி !
கைது
ஆட்டோ கடத்தல் விவகாரத்தில் 3 பேர் தாக்கியதில் வாலிபன் பலி - காவல்துறை நடவடிக்கை.
குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆம்னி பஸ் நிலையம் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வடசேரி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்த வாலிபரின் உடலில் காயங்கள் காணப்பட்டதால் அவரை யாரோ அடித்து கொலை செய்திருக்கிறார்கள் என சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து பிரேத பரிசினைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தவர் ஈத்தாமொழி அருகே உள்ள பொழிக்கரை பகுதியை சேர்ந்த ராஜன் (38) என தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிகுளம் பகுதிக்கு சென்ற போது அங்கு ஒரு ஆட்டோ டிரைவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரின் ஆட்டோ மாயமாகி உள்ளது. ஆட்டோவை ராஜன் தான் கடத்திருப்பார் என்று ஆட்டோ டிரைவர் சந்தேகப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் ஏற்பட்டு, ஆட்டோ டிரைவர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ராஜனை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூன்று பேர் சேர்ந்து ராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதல் தான் ராஜன் இறந்து விட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக செட்டிகுளத்தை சேர்ந்த ரெண்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story