ஆக.30 பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது: மண்டல அதிகாரி அறிவிப்பு!

ஆக.30 பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது: மண்டல அதிகாரி அறிவிப்பு!
தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட மையங்களில் வருகிற 30ஆம் தேதி பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட மையங்களில் வருகிற 30ஆம் தேதி பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 30.08.2024 (வெள்ளிகிழமை) அன்று ஒருநாள் மட்டும், அனைத்துவிதமான பாஸ்போர்ட் சேவைகள் வழங்கபடமாட்டாது. எனவே மதுரை மண்டல பாஸ்போரட் அலுவலகத்தின் கீழ் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் கோச்சடை- மதுரை மற்றும் திருநெல்வேலி மேலும் தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையங்கள் போடிநாயக்கனுர், கொடை ரோடு, தேவகோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி நாகர்கோவில் ஆகிய மையங்களில் 30.08.2024 (வெள்ளிகிழமை) ஒருநாள் மட்டும் பாஸ்போர்ட் சேவைகள் நடைபெறாது. அன்றைய தேதிக்கு ஏற்கனவே முன் அனுமதி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப முன் அனுமதியை மறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மதுரை பாரதி உலா வீதியில் இயங்கும் மண்டல பாஸ்போரட் அலுவலகத்திலும் விண்ணப்பதாரர்களுக்கான விசாரணைப் பிரிவு 30.08.2024 (வெள்ளிகிழமை) செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story