பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 30 பேர் கைது

பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 30 பேர் கைது
பெரம்பலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மே பத்தாம் தேதி காங்கிரஸ் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதனை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மூன்று பெண்கள் உட்பட 30 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

Tags

Next Story