ரயில் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயில் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா கடத்தல் 

வாலாஜா அருகே ரயில் நிலையத்தில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டையை அடுத்த தலங்கை ரயில் நிலையத்தில், ரகசிய தகவலின் அடிப்படையில் வேலூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் கேரள மாநிலத்தை சேர்ந்த சாஹீர் (25), முகமது பிலால் (19) என்பதும், ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 30 கி கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story