பிடிவாரண்டிலிருந்த 30 பேர் கைது

பிடிவாரண்டிலிருந்த 30 பேர் கைது

கைது 

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடிவாரன்டிலிருந்த 30 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவும்,ஆன்லைன் மூலமாகவும் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் 1994 முதல் 2023 வரை ஏராளமான புகார்கள் வந்தது. இதில் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டநிலையில் குற்றவாளிகள் சிலர் ஜாமினில் வெளியில் வந்தனர்.குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து 30 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Tags

Next Story