செங்கம் அருகே அதிமுகவில் இருந்து விலகி 30பேர் திமுகவில் இணைவு

செங்கம் அருகே அதிமுகவில் இருந்து விலகி 30பேர் திமுகவில் இணைவு

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

செங்கம் அருகே அதிமுகவிலிருந்து விலகி 30க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில் தலைமையில் 30 - க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளரும் செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு.பெ.கிரி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அப்பொழுது புதிதாக திமுகவில் இணைந்த இளைஞர்கள் மத்தியில் பேசுகையில் திமுக என்பது கொள்கை பிடிப்பான கட்சி எனவும் சாதி மத இன வேறுபாடுகள் அற்று அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்கக்கூடிய ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருவதாகவும் பாசிசத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே நடக்கும் ஒற்றை விரல் போர் நடைபெற்று வருவதாகவும்,

இதில் பாசிசத்தை வீழ்த்தக்கூடிய சக்தியாக அனைவரும் இருக்க வேண்டும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும் வழிமுறையையும் முறையாக பின்பற்றி ஆட்சி நடத்தக்கூடிய ஒரு இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருவதாக பேசினார். நிகழ்ச்சியில் செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் விஜய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story