300 பனை விதைகளும் பழ செடிகளும் பூச்செடிகளும் நடவு

வேலம்பட்டி புதூரில் நடைபெற்றது
பல்லடத்தை அடுத்த வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலம்பட்டி புதூர் பகுதிகளில் உள்ள குட்டை ஓரங்களில் 300 பனை விதைகளும் பழ செடிகளும் பூச்செடிகளும் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மலையாண்டவர் நடராஜ், துணைத் தலைவர்,அவினாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை, உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.நடவு செய்யப்பட்ட செடிகளை பாதுகாத்து பராமரிக்க தொடர்ந்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஊராட்சி மலையாண்டவர் நடராஜ் பொதுமக்களிடம் கேட்டு கொண்டார்.
Next Story