ஆத்தூரில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தபால் வாக்குகள் பதிவு

ஆத்தூரில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தபால் வாக்குகள் பதிவு

வாக்கு பதிவு செய்த அலுவலர்


ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடியில் சேலம் மாவட்ட மக்களவைத் தொகுதியில் உள்ள அலுவலர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் 312 பேர் பணிபுரிய உள்ள நிலையில் அவர்களுக்கான தபால் வாக்கு பதிவு ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் 312 அலுவலர்களுக்கான தபால் வாக்கு பதிவில் சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மேனகா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி மேற்பார்வையில் நடைபெற்றது இதில் 31 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் வட்டாட்சியர் பாலாஜி பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் மாணிக்கம் உள்ளிட்ட வருவாய் துறையினர் காவல் துறையினர் உடன் இருந்தனர்

Tags

Next Story