காங்கேயத்தில் மூன்று நாட்களில் 305 வாக்குகள் பதிவு

காங்கேயத்தில் மூன்று நாட்களில் 305 வாக்குகள் பதிவு

தபால் வாக்குகள் பதிவு

காங்கேயத்தில் 3 நாட்களில் மூத்த குடிமக்கள்,  மாற்றுத் திறனாளிகளிடம் 305  தாபல் வாக்குகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர், சென்னிமலை ஆகிய பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கடந்த மூன்று நாட்களாக வாக்கு பதிவு பெறப்பட்டது.

காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் மற்றும் புகைப்பட கலைஞர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர்கள் கொண்ட குழுவினர் 9 பிரிவுகளாக பிரிந்து வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது டைய மூத்த குடிமக்கள் உள்ள வீடுகளில் நேரில் வாக்கு சேகரிப்பு நடத்தினர்.

இதில் மொத்தம் 315 வாக்குகளில் கடந்த3 நாட்களில் 305 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.

Tags

Next Story