தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் இதுவரை 31பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 31 பேர் 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் மார்ச் 20 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மார்ச் 25 ஆம் தேதி 4 பேரும், 26 ஆம் தேதி 8 பேரும் என மொத்தம் 12 பேர் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, புதன்கிழமை திமுக, பாஜக வேட்பாளர்கள், தேமுதிக மாற்று வேட்பாளர் எஸ். பவளக்கொடி, சுயேச்சை வேட்பாளர்கள் அரு.சீர். தங்கராசு, எம்.அப்துல் ஹமீது, எஸ்.ராஜேந்திரன், என்.செந்தில்குமார், வி.குணசேகரன், எஸ்.ராஜா, எஸ்.எழிலரசன் உள்பட மொத்தம் 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இத்தொகுதியில் மொத்தம் 31 பேர் 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை செய்யப்பட்டு, மார்ச் 30 ஆம் தேதி மாலை இறுதிப் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story