குறைதீர் கூட்டத்தில் 310 மனுக்கள் பெறப்பட்டன

குறைதீர் கூட்டத்தில் 310 மனுக்கள் பெறப்பட்டன

 குறைதீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 310 மனுக்கள் பெறப்பட்டன - மாவட்ட நிர்வாகம் தகவல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (19.02.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 310 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் அறிவுறுத்தினார்.

Tags

Next Story