பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை விழா!

பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை விழா!

பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது.


பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது.

பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது. பொன்னமராவதியில் ஸத்குரு தியாகராஜ சுவாமிகளின் 31-ஆம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழா தொடங்கியது. விழாவில் தியாகராஜர் பட ஊர்வலம் மற்றும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் தொடக்கமாக கோவிலூர் கண்ணன் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி மற்றும் புதுப்பட்டி ராஜா குழுவினரின் நாகசுர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காரைக்குடி நீலாயதாட்சி குழுவினரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் கோஷ்டி கானம் நடைபெற்றது. பின்னர், புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி சாய் சங்கர் யோத்யா சார்பில் திவ்யலட்சுமியின் வாய்ப்பாட்டு மற்றும் மாணவ, மாணவிகளின் பரதநாட்டியம், நாகசுர கலைஞர்கள் திருமெய்ஞானம் டிஆர்என்.ராமநாதன், பாண்டமங்கலம் யுவராஜ் மற்றும் தவில் கலைஞர் திருவரங்குளம் டி.கணேசன் ஆகியோரின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிறைவாக ஆஞ்சனேயர் உற்ஸவம் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை பொன்னமராவதி ஸத்குரு தியாகப்பிரம்ம மகோத்சவ சபா தமிழிசை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story