திருவாரூரில் ரூ.3.25 லட்சம் மோசடி

திருவாரூரில் ரூ.3.25 லட்சம் மோசடி

கோப்பு படம்

வெளிநாடு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி மன்னார்குடி மேல திருப்பால குடி பகுதியை சேர்ந்த சுமன் என்பவர் ரூ.3,25,000 பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றியுள்ளார்.

இதனை அடுத்து பலமுறை பணத்தை திருப்பி கொடுக்குமாறு பிரகாஷ் கேட்டுள்ளார். தொடர்ந்து பணம் தருவதாக ஏமாற்றி வந்த சுமன் போன் மூலம் பிரகாசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் சுமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story