33 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா.

33 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா.
X
பள்ளி மேம்பாட்டு நிதி 2022-23 கீழ் திருவாரூர் நகராட்சியிலுள்ள, கே.டி.ஆர் நகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வகுப்பறை கட்டடத்தினையும் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.
மாநில நிதிக்குழு - பள்ளி மேம்பாட்டு நிதி 2022-23 கீழ் திருவாரூர் நகராட்சியிலுள்ள, கே.டி.ஆர் நகராட்சி ஆரம்பப்பள்ளியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வகுப்பறை கட்டடத்தினையும் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், திருவாரூர் நகர்மன்றத்தலைவர் புவனப்பிரியா செந்தில், நகராட்சி ஆணையர் தாமோதரன், பணிநியமன குழு உறுப்பினர் பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள், வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story