34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோராத தொகைக்கு தொடர்புடைய 8 வாடிக்கையாளருக்கு ரூ.9.45 லட்சம் மதிப்பிலான வைப்புத் தொகை நிதி திருப்பி ஒப்படைப்புக்கான ஆணைகளை மாவட்ட அட்சித்தலைவர் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் இன்று (18.12.2025) நடைபெற்றது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் தொழில் செய்ய விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் சுயதொழில் செய்வதற்கு மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வேளாண்மை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கைத்தறி துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் வாயிலாக எளிதில் கடன் பெறும் வகையில், மாவட்ட தொழில் மையம் மூலம் நேரடியாக பயன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கான சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் --- நபர்கள் கலந்துகொண்டனர். மேலும், பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளாக தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். அதன்படி, கலைஞரின் கைவினைத் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளையும், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 9 பயனாளிகளுக்கு ரூ30.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளையும்,படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.43.39 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளையும்,பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ15.65 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணைகளையும், அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.9.80 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான ஆணை என 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, வழங்கினார். மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோராத தொகைக்கு தொடர்புடைய 8 வாடிக்கையாளருக்கு ரூ.9.45 லட்சம் மதிப்பிலான வைப்புத் தொகை நிதி திருப்பி ஒப்படைப்புக்கான ஆணைகளை மாவட்ட அட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத், தாட்கோ பொது மேலாளர் கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story