பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது 3449 பாட்டில்கள் பறிமுதல்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த  மது 3449 பாட்டில்கள் பறிமுதல்

முள்ளூர்துறை கடலோர கிராமங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3449 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


முள்ளூர்துறை கடலோர கிராமங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3449 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே முள்ளூர் துறை கடற்கரை மீனவ கிராமத்தில் பாழடைந்த ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழில் சாலையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக புதுக்கடை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுக்கடை காவல் நிலைய ஆய்வாளர் முத்து தலைமையில் இன்று காலை போலீசார் அந்த தொழில் சாலையில் நடத்திய சோதனையில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3449 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது.

மேலும் இது போன்று பல இடங்களில் மது பாட்டில்கள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த மது பாட்டில்களை பதுக்கிவைத்தது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story