கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயற்சித்த 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கௌதம் நேற்று இரவு குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பீச் ரோடு சந்திப்பில் செல்லும் போது அங்கு மறைவான ஒரு இடத்தில் கேரளாவுக்கு கடத்தி செல்ல ரேஷன் அரிசி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தார். அப்போது அங்கு சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 350 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் அரிசி மூட்டைகளை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் அரிசி மூடைகள் கல்குளம் வட்ட வழங்க அலுவலக ஊழியர்கள் மூலம் உடையார் விளை அரசு வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story