சங்கராபுரத்தில் 350 லிட்டர் சாராயம் பறிமுதல்

சங்கராபுரத்தில் 350 லிட்டர் சாராயம் பறிமுதல்

காவல்துறை விசாரணை


சங்கராபுரத்தில் 350 லிட்டர் சாராயம் பறிமுதல்
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் சங்கராபுரம் பகுதியில் போலீசார் பல்வேறு கிராமங்களில் அதிரடி சாராய சோதனை நடத்தினர். அதில், சாராயம் விற்ற கொசப்பாடி கண்ணன், 65; அரசம்பட்டு ரமேஷ், 45; நெடுமானுார் சாமுண்டி மனைவி சரசு, 37; ஜவளிகுப்பம் மாரிமுத்து, 45; புதுபாலப்பட்டு கிருஷ்ணமூர்த்தி, 60; வடசிறுவளூர் நாகராஜன், 50; ஆகிய 6 பேரை கைது செய்து, 350 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story