எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு தினம்: ஒபிஎஸ் அணி சார்பில் மலரஞ்சலி

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக ஒபிஎஸ்அணி சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டத்து.

புதுக்கோட்டையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுக OPS அணி சார்பில் கழகத்தின் மூத்த முன்னோடி புலவர் ராஜேந்திரன் மலரஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை நெல்லு மண்டி தெருவில் உள்ள அதிமுக OPS அணியின் கழக அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள் முன்னதாக அதிமுக OPS அணியின் மூத்த முன்னோடி புலவர் ராஜேந்திரன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.

இதனை தொடர்ந்து கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் புரட்சித்தலைவரின் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் 500 பேருக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் முத்தையன், அவை தலைவர் சந்தானம், பொருளாளர் செழியன், நகர செயலாளர் மாரிமுத்து , கணேசன், உள்ளிட்ட ஒன்றிய, நகர, ஊராட்சி, பேரூராட்சி, பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story