மரத்தின் மீது பேருந்து மோதி விபத்து -37 பேர் காயம்

மரத்தின் மீது பேருந்து மோதி விபத்து  -37 பேர் காயம்

வியத்துக்குள்ளான பேருந்து 

செய்யாறு அருகே திரும்பூண்டியில் தனியார் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 37 பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே திரும்பூண்டி பகுதியில் அதிகாலை குடியாத்தம் தாலுகா கீழ்ப்பட்டி கிராமத்திலிருந்து 50 பேர் மேல்மருவத்தூர் சென்ற போது பேருந்து டிரைவர் கட்டுப்பாட்டிலிருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 37 பேர் காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் உள்நோயாளியாகவும் மீதமுள்ளவர்கள் புற நோயாளிகள் சிகிச்சை பெற்றனர்.இச்சம்பவம் குறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story