கொடைக்கானல் மலர் கண்காட்சியை காண 3800 சுற்றுலா பயணிகள் வருகை

கொடைக்கானல் மலர் கண்காட்சியை காண 3800 சுற்றுலா பயணிகள் வருகை

கொடைக்கானல் மலர் கண்காட்சி

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் 3 ஆம் நாள் மலர் கண்காட்சியை காண 3800 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நேற்று முன்தினம் மலர் கண்காட்சி துவங்கியது. மூன்றாம் நாள் மலர்கள் கண் காட்சியை காண இன்று 3800 சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்காவிற்கு வருகை புரிந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகையால் இன்று மட்டும் 2,61000 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தோட்டக்கலை துணை அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வந்த மழையின் காரணமாக மலர் கண்காட்சியை காண பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story