குறைதீர்க்கும் கூட்டத்தில் 389 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 389 மனுக்கள் பெறப்பட்டன.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா , சாலை வசதி , சாக்கடை வசதி , ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 389 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம்‌ நேரிடையாக வழங்கியுள்ளனர்.

Tags

Next Story