4 வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு துவக்கம்

தர்மபுரியில் 4 வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் துவங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தருமபுரி மண்டலத்தின் சார்பில் நான்கு வழித்தடங்களில் தட நீட்டிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பயணம் செய்யும் பேருந்து சேவையை வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், முன்னிலையில் நேற்று புதன்கிழமை இரவு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story