கச்சிராயபாளையம் பகுதியில் தலைமறைவான 4 பேர் கைது

கச்சிராயபாளையம் பகுதியில் தலைமறைவான 4 பேர் கைது
பைல் படம்
கச்சிராயபாளையம் பகுதியில் காவல் நிலைய வழக்குகளில் தலைமறைவாக இருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் பகுதியில் காவல் நிலைய வழக்குகளில் தலைமறைவாக இருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கச்சிராயபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பழைய அடிதடி வழக்குகளில் தலைமறைவாக இருந்து வந்த நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அதன்படி கீரனுாரை சேர்ந்த சுப்ரமணியன் மனைவி நதியரசி,36; மற்றொரு வழக்கில் பைத்தந்ததுரை சேர்ந்த சுப்புடு மனைவி கீதா,34; தென்செட்டியந்தல் ராஜா,42; ஆகியோரை கைது செய்தனர். அதேபோல் வேறுறொரு வழக்கில் வெள்ளிமலை சேர்ந்த கந்தசாமி மகன் அருண்விஜய்,27, என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story