சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

சேவல் சண்டை நடத்திய 4 பேர் கைது

திருமயம் அருகே சேவல் சண்டை நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஆதனூர் கோவில்பட்டி பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தப்படுவதாக திருமயம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த செல்வம் வயது (21), தேவகோட்டையை சேர்ந்த கணேஷ் வயது (37), மணி வயது (27 ), ஆதனூரை சேர்ந்த நாகராஜன் வயது (42) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பைக்குகள், ஏழு சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

Tags

Next Story