முன் விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 4- பேர் கைது

முன் விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 4- பேர் கைது

காவல்துறை விசாரணை


முன் விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய 4- பேர் கைது. காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள காட்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தானதுரை வயது 27. இவர்க்கும் அதே பகுதியை சேர்ந்த ராகுல் வயது 25, கிருஷ்ணராயபுரம், அரசவள்ளி தெருவை சேர்ந்த சுரேஷ் வயது 22, காட்டூர் பகுதியைச் சேர்ந்த மோகன் வயது 17, அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் வயது 23. ஆகிய நான்கு பேருக்கும் சந்தானத்துரைக்கும் ஏற்கனவே அப்பகுதியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சந்தானதுரை ஏப்ரல் 6-ம் தேதி காலை 10:45 மணி அளவில், காட்டூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ராகுல், சுரேஷ், மோகன், சண்முகம் ஆகிய நான்கு பேரும் தன்னிச்சையாக சென்று, சந்தான துரையை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி காயப்படுத்தினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக சந்தானத்துரை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு மறுநாள் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ராகுல், சுரேஷ்,மோகன், சண்முகம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலையபினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story