கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது

அத்துமீறிய கஞ்சா விற்ற 4 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர். 

அத்துமீறிய கஞ்சா விற்ற 4 பேரை திருப்புவனம் போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருப்புவனம் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை பெத்தனியாபுரம் பகுதியை சேர்ந்த சரண் பாண்டியன், பாசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த முரளிகண்ணன், திருப்புவனம் தட்டான்குளம் பகுதியை சேர்ந்த ஹரிராம் மற்றும் பாண்டிகருப்பு ஆகியோர் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தநிலையில் அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story