திருமுருகன்பூண்டியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

திருமுருகன்பூண்டியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

காவல் நிலையம்

திருமுருகன்பூண்டியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது. 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

திரதிருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பெரியாயிபாளையம் ரோட்டில் வாலிபர்கள் ரெண்டு பேர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டு செல்வதாக திருமுருகன் பூண்டி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரெண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மார்சல் (வயது 24) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பகடா (21) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த,

போலீசார் அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து திருமுருகன்பூண்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருப்பூர் பிஎன் ரோடு பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அஜித் (24) விஜய் (23) உள்ளிட்ட 2 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் சசெய்யப்பட்டது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story